ARTICLE AD BOX

தமிழகத்தில் தெலுங்கு நாயகர்களுக்கு போதிய திரையரங்குகள் கிடைப்பதில்லை என்று கிரண் அப்பாவரம் தெரிவித்துள்ளார். தெலுங்கில் முன்னணி நாயகர்களுக்கு அடுத்த வரிசையில் இருப்பவர் கிரண் அப்பாவரம். இவருடைய நடிப்பில் சில படங்கள் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தீபாவளிக்கு இவருடைய நடிப்பில் ‘கேரேம்ப்’ வெளியாகவுள்ளது. இது தொடர்பாக அளித்த பேட்டியில், தமிழகத்தில் திரையரங்குகள் கிடைப்பதில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக கிரண் அப்பாவரம் அளித்த பேட்டியில், “தெலுங்கு மக்கள் பிற மொழி படங்களை ஊக்குவிக்கிறார்கள். சமீபத்தில் கூட ‘லோகா’ படம் பார்க்க திரையரங்குக்கு சென்றிருந்தேன். முதல் வாரத்தில் இங்கு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்தது. 2-வது வாரத்திலும் அரங்கு நிறைந்த காட்சிகள் தான். தெலுங்கு திரையுலகினரும் நல்ல படங்களை உருவாக்குகிறார்கள். ஆனால், இதர மாநிலங்களில் இங்குள்ள வரவேற்பு போல கிடைப்பதில்லை.

2 months ago
4






English (US) ·