ARTICLE AD BOX

’ஜாவா சுந்தரேசன்’ என தனது பெயரை மாற்றிக் கொண்டார் நடிகர் சாம்ஸ். சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான ‘அறை எண் 305-ல் கடவுள்’ படத்தில் ஜாவா சுந்தரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாம்ஸ். இந்தக் கதாபாத்திரம் மிகவும் பிரபலம். இப்போது வரை மீம்ஸ்களில் உலவி வருகிறது. இந்த கதாபாத்திர பெயரை தனது பெயராகவே மாற்றிக் கொண்டார் சாம்ஸ்.
இது தொடர்பாக சாம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னுடைய இயற்பெயர் சுவாமிநாதன். திரைத் துறைக்கு வந்த பிறகு நான் தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக எனது பெயரை "சாம்ஸ்" (CHAAMS) என்று மாற்றிக் கொண்டேன். "சாம்ஸ்" என்ற பெயரில் தான் பல வருடங்களாக பல படங்களில் நடித்து வந்துள்ளேன். ஆனால் இயக்குநர் சிம்பு தேவன் அவர்களின் இயக்கத்தில் வந்த ‘அறை எண் 305-ல் கடவுள்’படத்தில் நான் நடித்த ‘ஜாவா சுந்தரேசன்’ கதாபாத்திரம் மிகவும் புகழ் பெற்று அந்தப் பெயரை சொல்லியே ரசிகர்கள் என்னை அழைப்பதும் அதை வைத்து பல மீம்ஸ்கள் உருவாக்கி, பகிர்ந்து, பரவியதால் அந்தப் பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது.

2 months ago
4





English (US) ·