நிழலும் உணர்வும்: திரை உலகின் இருள் பேசும் கலை | ஒளி என்பது வெளிச்சமல்ல 02

2 months ago 4
ARTICLE AD BOX

ஒளி சினி​மா​வின் ஆன்மா எனில், நிழல் அதன் நிசப்​த​மான குரல். அது வெறும் இருளல்ல. ஒரு காட்​சி​யின் உணர்ச்​சி, மனநிலை, தத்​து​வம், கூடவே கதை​யின் மறை​முக​மான அடுக்​கு​களை​யும் வெளிப்​படுத்​தும் சக்தி கொண்​டது. ஒளி கண்​களுக்​குத் தெரியலாம், ஆனால் நிழல் நேராக மனதுடன் பேசுகிறது. சினிமா வரலாற்​றில் பல ஒளிப்​ப​தி​வாளர்​கள் நிழலைப் பயன்​படுத்தி காட்​சிகளை மட்​டும் அழகுபடுத்​தாமல், கதை​யின் உள் உலகை​யும் செதுக்​கி​யுள்​ளனர்​.

கே.எஸ். பிரசாத் – மர்மத்தைச் செதுக்கிய நிழல்கள்: ஆரம்​ப​கால வண்​ணப்​படங்​களில் ஒன்​றான ‘பு​திய பறவை’​யில் கே.எஸ். பிர​சாத், நிழலின் சக்​தியை அசா​தா​ரண​மான அளவுக்​குக் கொண்டு சென்​றார். நீண்ட நிழல்​களால் மர்​மத்​தைச் செதுக்​கி, வண்​ணப்​படங்​களின் ஆரம்ப காலத்​தில் கடின​மான வண்ண அடுக்​கு​களை உரு​வாக்​கி​னார். ஒளி மற்​றும் நிழலின் நுண்​ணிய சமநிலை​யால் அவர் அமைத்த காட்​சிகள் இன்​று​வரை ஒரு பாட​மாக நிற்​கின்​றன.

Read Entire Article