ARTICLE AD BOX

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் வேலை வெட்டி இல்லாமல் பொழுதைக் கழிக்கிறார்கள் வேலனும் (விமல்) அவர் நண்பர் உரப்பும் (சூரி). மது போதையில், ஊர்க்காரர்களுக்கு எவ்வளவு டார்ச்சர் கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுக்கிறார்கள். அவர்களின் கொடுமை தாங்காமல் ஊர் கூடி மொய்பிரித்து, வேலனை மட்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்கிறது. அவர் இல்லாமல் ஊர் நிம்மதியாக இருக்கும் போது, திடீரென்று வந்து இறங்குகிறார் அவர். ஊரில் அவருக்கு ராஜ மரியாதை நடக்கிறது.
வேலனுக்கு அப்படியொரு மரியாதை கிடைக்கக் காரணம் என்ன? ஊர் திரும்பிய அவர், பழைய வேலனாகவே இருந்தாரா? இல்லை ஊரை மாற்றினரா? என்பது கதை. முதல் பாதி ஜாலி கேலி, இரண்டாம் பாதியில் சமூகத்துக்கான மெசேஜ் என்கிற பார்முலா கதைகளின் பாணியில் வந்திக்கிறது ‘படவா’. விமல், சூரி ‘காம்பினேஷன்’ காமெடி சில இடங்களில் நன்றாக ஒர்க் அவுட் ஆகின்றன.

9 months ago
9






English (US) ·