ARTICLE AD BOX

ஹாலிவுட் மற்றும் பிரிட்டீஷ் திரைப்படங்களின் பாதிப்பில், தனது 17 வயதிலேயே சினிமாவுக்கு வந்தவர், வட இந்தியரான கே.அமர்நாத். ஆரம்ப காலகட்டங்களில் திரைப்படங்கள் அதிகமாக உருவான கொல்கத்தாவுக்குச் சென்ற அவர், அங்கு நடிப்பதற்கு வாய்ப்புகளைத் தேடினார்.
பின்னர் மும்பைக்குத் திரும்பினார். அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக சில படங்களில் நடித்தார். பிறகுதான், சினிமாவில் நடிப்பை விட இயக்குநர் ‘சீட்’ முக்கியம் என்பது அவருக்குப் புரிந்தது. இதனால் நடிப்பில் இருந்து அவர் கனவு இயக்குநர் ‘சீட்’ பக்கம் தாவியது. நான்கு வருடப் போராட்டங்களுக்குப் பிறகு ‘மத்வாலி ஜோகன்’ என்ற இந்திப்படம் மூலம் இயக்குநரானார் அவர். அப்போது அவருக்கு வயது 21.

1 month ago
4






English (US) ·