ARTICLE AD BOX

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் கொச்சி வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர் வீட்டிலிருந்து 4 யானை தந்தங்களைப் பறிமுதல் செய்தனர். அவற்றை வீட்டில் வைத்திருக்க மோகன்லால் உரிய லைசென்ஸ் பெறவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.
இதுதொடர்பாக மோகன்லால் மற்றும் அவருக்குத் தந்தங்களைக் கொடுத்த திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் உள்பட 4 பேர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் வனத்துறை சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்பட்டு, தந்தங்களை வைத்திருக்க மோகன்லாலுக்கு, கடந்த 2015-ம் ஆண்டு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து அவர் மீதான வழக்கை வனத்துறை ரத்து செய்தது.

2 months ago
4






English (US) ·