ARTICLE AD BOX
ஹைதராபாத்தில் வட இந்திய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் ரித்து வர்மா. இவரது தந்தை மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ஆகும். இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளை சரளமாக பேசக்கூடிய ரித்து வர்மா, ஹைதராபாத்தல் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
கல்லூரி படிப்பை முடித்தப்பிறகு மிஸ் ஹைதராபாத் அழகி போட்டியில் ரித்து வர்மா பங்கேற்றார். அதில் முதல் ரன்னர் அப் ஆக தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், அங்கு வந்திருந்த இயக்குனர் மூலம் குறும்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ரித்துக்கு கிடைத்தது.
Anukokunda என்னும் குறும்படத்தில் லீட் ரோலில் ரித்து வர்மாவை நடிக்க வைத்தார். இப்படம் 2012ல் 48HR Film Project போட்டியில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றது மட்டுமின்றி ரித்து வர்மாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.
தெலுங்கு சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார் ரித்து வர்மா. அவரது 2வது படமான Prema Ishq Kaadhal-ல் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார். பிறகு, Naa Rakumarudu படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
ரித்துவின் நடிப்பை பாராட்டி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. குறிப்பாக, துல்கர் சல்மானின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம், ரித்துவின் சினிமா கேரியருக்கு முக்கியமாக அமைந்தது
ரித்துவுக்கு கிரிக்கெட் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உள்ளது. ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும், ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிரமாக ரசிகையாகும்
ரித்து வர்மாவுக்கு ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் உள்ளது. அதற்காக பயிற்சி எடுத்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. லாக்டவுன் காலத்தில் அழகிய ஓவியங்கள் மூலம் தனது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார்
புதிய இடங்களுக்கு பயணம் செய்வது ரித்துவுக்கு மிகவும் பிடிக்குமாம். ஷூட்டிங் நடுவே ஏராளமான வெளிநாடுகளுக்கு பயணம் செய்து புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர செய்வார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 22 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர செய்கின்றனர்.
Thanks For Reading!







English (US) ·