ARTICLE AD BOX

சென்னை: “எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம். ஒருவேளை நான் விருது வாங்கினால் போகும் வழியிலேயே குப்பைத் தொட்டியில் வீசிவிடுவேன்” என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய அவர், “எனக்கு விருதுகளில் நம்பிக்கை இல்லை. விருதுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனம். நான்கு பேர் உட்காந்து கொண்டு 8 கோடி பேருக்கு யார் பிடித்த நடிகர், எது பிடித்த படம் என்று முடிவு செய்யும் அளவுக்கு அவர்கள் என்ன மேதாவிகளா? நான் தேசிய விருதுகளையும்தான் சொல்கிறேன். நீங்கள் சர்வே எடுங்கள். மக்கள் சர்வே தான் முக்கியம். இவர்கள் தான் சிறந்த நடிகர் என்று நீங்களே எப்படி முடிவு செய்யமுடியும்? எனக்கு அப்படியான விருதுகளில் நம்பிக்கை கிடையாது. எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக நான் இப்படி பேசவில்லை. அதற்கான வரையறைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

2 months ago
4






English (US) ·